வலுவான கட்சிகளை பிளப்பது அரசியல் சாணக்கியம். அதிகாரம், ஆட்சி ,ஆட்டுவிக்கும் திறமை ,சகுனித்தனம் இருந்தால் கட்சிகளை உடைத்து விடலாம். ஜெயலலிதா இறந்த பின்னர் அ.இ.அ.தி.மு.க. என்ன ஆனது? உடைக்கப்பட்டு ஓட்ட வைக்கப்படவில்லையா? தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் எவருடைய கட்டளைப்படி நாட்களை கடத்துகிறது? சுயம் இழந்தபின் மரியாதை எப்படி கிடைக்கும்?
அத்தகைய நிலை தி.மு.கழகத்துக்கு ஏற்படுமா?
நாளை கழகத்தின் செயற்குழு நடக்கவிருக்கிற நிலையில் கட்சியில் இல்லாத அழகிரி “தனக்கு கழகம் தொடர்பான ஆதங்கம் இருக்கிறது.கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் இருக்கிறார்கள்” என்று சொல்வது ஏன்? எதை சொல்லவிருக்கிறார்? அவரது கோரிக்கை என்னவாக இருக்கும்? கலைஞரால் நீக்கப்பட்ட அழகிரியை நாளைய செயற்குழு திரும்பவும் ஏற்றுக்கொள்ளுமா? இன்னும் பல கேள்விகள். நாளை விடை கிடைக்குமா?
விசுவாசிகள் என்கிற வார்த்தை ஜெயலலிதாவை தொழுதவர்கள் அதிகமாகப் பயன்படுத்தியது. கழகத்தவரை கலைஞர் ‘உயிரிலும் மேலான உடன் பிறப்புகளே’ என்றுதான் அழைப்பார்.
சிறு பொறிதான் பெருந்தீயாக மாறும். இன்னும் இரண்டொரு நாளில் அழகிரி பதில் அளிக்கப்போவதாக கூறி இருக்கிறார்.
சூட்சுமக் கயிறு டில்லியிலா இருக்கிறது?