ராஜ நாகம் தரையிலிருந்து எந்த உயரத்துக்கு தலையைத் தூக்கிக்கொண்டு படம் எடுத்து சீறும்?
அது அதன் கோபத்தின் அளவினைப் பொருத்தது !
அதைப்போலத்தான் தீண்டாமையும்!
அண்டை மாநிலமான கன்னடத்தை சேர்ந்தவர் நாராயணசாமி .பாஜக.வின் பாராளுமன்ற உறுப்பினர்.தும்கூர் மாவட்டம் .
இவர் டாக்டர்கள்,மற்றும் பயோகான் அதிகாரிகளுடன் கொல்லாராஹட்டி கிராமத்துக்கு சென்றிருக்கிறார்.
“நீங்கள் தீண்டத் தகாதவர் உள்ளே வரக்கூடாது” அந்த கிராமத்தவர்கள் தடுத்து நிறுத்தி விட்டனர்.
மாவட்ட போலீஸ் அதிகாரி தனது அதிகாரத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டரை அனுப்பி விசாரணை செய்யும்படி உத்திரவிட்டிருக்கிறார்.
ஆனால் அந்த அதிகாரியையும் வேறு ஜாதி என சொல்லி உள்ளே வரவிடவில்லை.
சட்டமே தலை குனிந்திருக்கிறது.உள்துறை மந்திரி அமித்ஷா கவனிக்க!