ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, வெற்றி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டவை:
காரமடை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் ஓடந்துறை ஊராட்சி தேர்தல் வெற்றி விபரம்:
தலைவர் பதவிக்கு:
திமுக: தங்கவேல்—1409 (வெற்றி)
அதிமுக: சண்முகம்—1356
சுயேச்சைகள்:
ராதாகிருஷ்ணன் –45
பாலு—-159
வார்டு உறுப்பினர் பதவியில் வெற்றி பெற்றவர்கள்:
1: ஜானகி—120 (அதிமுக_
2: தேவி—110 (திமுக)
3: ரேவதி—114 (அதிமுக)
4:வடிவேல்—111(அதிமுக)
5:உமர்பாரூக் (திமுக)
6: நீலாவதி—207 (அதிமுக)
7: வெள்ளிங்கிரி—112 (அதிமுக)
8: விஜயலட்சுமி—128 (அதிமுக)
9:முருகையன்— (திமுக)
***
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியக் குழு முதலாவது வார்டில் திமுக வெற்றி.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த விஜயன் 1048 வாக்கு பெற்று 22 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.
***
சுல்தான்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 2 ஆவது வார்டு உறுப்பினராக சுயேச்சை வேட்பாளர் மனோகரன் வெற்றி.
ஒன்றாவது வார்டு உறுப்பினராக தி. மு.க. வேட்பாளர் விஜயகுமார் வெற்றி.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டில் திமுக வேட்பாளர் சீத்தப்பன் வெற்றி.
***
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம்
கொட்டகுடி – கிராம ஊராட்சி
தலைவர் – ராஜேந்திரன்
வார்டு உறுப்பினர்கள்
தாஸ் 1, சிவனாண்டி 2, மாரியம்மாள் 3, குமார் லட்சுமி 5. தனலட்சுமி 6 ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
***
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் செழியன் வெற்றி.
சிவகங்கை ஒன்றியத்தில் அழகமாநகரி ஊராட்சி மன்ற தலைவராக ராதாகிருஷ்ணன் வெற்றி
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய 1வது வார்டில் திமுக வேட்பாளர் ரமேஷ் வெற்றி.
***
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் – ஊராட்சி ஒன்றியம் தேர்தல் முடிவு.
அகமலை- கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு லதா தேர்வு.
வார்டு உறுப்பினர்களாக ஒச்சகாளை – 1 , விஜயா 2, முருகன் 3 , மருதம்மாள் 4, சாரதா 5, ரமேஷ்பாபு 6 ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் 1ஆவது வார்டில் திமுக வேட்பாளர் மனோகரன் வெற்றி பெற்றுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் 2வது வார்டில் அமமுக வேட்பாளர் சவிதா ரமேஷ் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிா்த்து மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 37,830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4 ,700 கிராம ஊராட்சிமன்றத் தலைவா்கள் என மொத்தம் 45,336 பதவி இடங்களுக்கான முதற்கட்ட தோ்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இரண்டாம் கட்டம்: அதேபோன்று, 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 38,916 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4,924 கிராம ஊராட்சித் தலைவா்கள் என மொத்தம் 46,639 பதவி இடங்களுக்கான இரண்டாம் கட்ட தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கள்கிழமை நடந்தது. இதில் 77.73 சதவீதம் வாக்குகள் பதிவாகின.