இப்படியொரு கொடுமை எங்கேயாவது நடந்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கணவன் மனைவி இருவருமே ஐபிஎஸ் அதிகாரிகள் .போலீஸ் துறையில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்.
அருண் ரங்கராஜன் சட்டீஸ்கரில் பணியாற்றியபோது அங்கு பணியாற்றிய சக ஐ பி எஸ் அதிகாரியை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார் .இருவருக்கும் அங்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கர்நாடகாவில் வளர்க்க மனைவி விரும்பியதால் இருவரும் மாற்றலாகி வந்து விட்டார்கள்.
வந்த இடத்தில் என்ன பிரச்னையோ இருவரும் டைவர்ஸ் விரும்பி மனு செய்தார்கள். டைவர்ஸ் விசாரணையில் இருக்கும்போது என்ன நினைத்தார்களோ சேர்ந்து வாழ்ந்தனர்.
டைவர்ஸ் வழக்கு ஒரு பக்கம் இவர்கள் தாம்பத்யம் இன்னொரு பக்கம் .பலன் இன்னொரு குழந்தை..
மறுபடியும் முட்டிக்கொள்ள இருவரும் பிரிந்தனர்.
கல்பூராகி சரகத்துக்கு ரங்கராஜன் மாவட்ட போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று பிள்ளைகளை பார்க்கப்போன ரங்கராஜனை பிரிந்து வாழ்கிற மனைவி வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார்.
அதனால் என்ன என்று வீட்டு காமபவுண்டு சுவர் பக்கமாக பையுடன் அமர்ந்து தர்ணா செய்யவே மேலிடத்துக்கு தகவல் போனது.
அதிகாரிகள் பேசிப்பார்த்தனர். ஆனால் வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று மனைவி மறுத்து விட்டார்.மறுபடியும் மயங்கி விடுவோம் என பயந்தாரோ என்னவோ !
வேடிக்கை பார்க்கிற கூட்டத்தை கலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.!